தூத்துக்குடி, டிச. 19: தூத்துக்குடி சி.வ. அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தினகரன் அறிவொளி திட்டத்தின் கீழ் அபி நிறுவனங்கள் சார்பில் கல்வி மலர் புத்தகம் வழங்கப்பட்டது. தினகரன் நாளிதழின் அறிவொளி திட்டத்தின்கீழ் தூத்துக்குடி சி.வ.அரசு மேல்நிலைப் பள்ளியில் 10, 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தூத்துக்குடி அபி நிறுவனங்கள் சார்பில் கல்விமலர் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற அபி நிறுவனங்களின் தலைவர் எஸ்.டி.ஆர். பொன்சீலன், மாணவ, மாணவிகளுக்கு தினகரன் கல்விமலர் புத்தகங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் தலைமையாசிரியை செந்தூர்கனி மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.